தனியார் பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே தனியார் பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-05 10:32 GMT

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, திருக்காம்புலியூர் அருகே உள்ள சின்னமலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு வயது 52. இவர் ஏப்ரல் 1ம் தேதி இரவு ஏழேகால் மணியளவில், திருச்சியில் இருந்து கரூர் செல்லும் டி வி ஆர் தனியார் பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்து மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட, திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த ஈச்சர் சரக்கு வாகனம்,தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தங்கராசுக்கு முன் நெற்றி, இடது கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கராசு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News