வேப்பனப்பள்ளி பகுதியில் கே. பி. முனுசாமி வாக்கு சேகரிப்பு

வேப்பனப்பள்ளி பகுதியில் கே. பி. முனுசாமி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து தீவிர தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

Update: 2024-04-04 16:08 GMT

வாக்கு சேகரித்த முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து சூளகிரி மத்திய ஒன்றியம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கேபி முனுசாமி பரப்புரை மேற்கொண்டார்.

சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட உங்கட்டி, தோரிப்பள்ளி, தாசனபுரம், கானலட்டி, புளியரசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்றும், விவசாய நிலத்தில் பயிர் செய்பவர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்,

அவருக்கு ஒதுக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் சூளகிரி பகுதி விவசாயம் நிறைந்த பகுதி இந்த பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்திருந்தாலும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் கோரிக்கை வைத்து விவசாய நிலங்களை எடுக்காத நல்ல சூழல் உருவாகியுள்ளது.

விவசாயப் பகுதிகளுக்கு நீர் ஆதாரம் குறைவாக உள்ள காரணத்தினால் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்த பொழுது சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஜெயப்பிரகாசுக்கு வெறு வகையான வாக்குகளை அளிக்க வேண்டும் என பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்

Tags:    

Similar News