படைவீரர் கொடிநாள் விழா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடிநாள் விழாவில், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2023-12-07 08:54 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடிநாள் விழாவில், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டிசம்பர் 7ம் தேதி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தலைமையில் , படைவீரர் கொடிநாள் விழா நடைபெற்றது.

உண்டியலில் பணம் , செலுத்தி கொடிநாள் வசூலினை துவக்கி வைத்தார். இக்கொடிநாள் விழாவின்போது வசூல் செய்யப்படும் தொகையானது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்காக, செலவிடப்படுகிறது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

Advertisement

இவ்விழாவில் 7 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், 3 நபருக்கு வங்கிக்கடன் ,வட்டிமானியமும், 3 முன்னாள் படைவீரரின் சார்ந்தோர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியும், 3 முன்னாள் படைவீரரை சார்ந்தோர்களுக்கு, கண்கண்ணாடி நிதியுதவியும் என, மொத்தம் 16 பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,41,024 மதிப்பிலான ,நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ராகவேந்திரன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News