கால்நடை மருத்துவ முகாம்

சாணார்பட்டி அருகே கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி, குடற்புழு நீக்க சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

Update: 2024-01-10 12:04 GMT

கால்நடை மருத்துவ முகாம் 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட செடிபட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் மேற்பார்வையில்,உதவி இயக்குனர் அப்துல் காதர்,விஜயகுமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் முருகானந்தம் அஞ்சு குழிபட்டி கால்நடை உதவி மருத்துவர் சிவச்சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி, சிகிச்சைகள், குடற்புழு நீக்கம் ஆகியவற்றை மேற்கொண்டனர். முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் கால்நடைகள் சிறப்பாக வளர்ப்போருக்கு ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கால்நடை வளர்ப்போர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News