அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

வேப்பந்தட்டை அருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-03-01 04:55 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தூத்தப்பூர் கிராமத்தில் 2வது வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களுக்கு போக்குவரத்துக்கு போதிய சாலை வசதி இல்லை என்றும், குடிநீர் தெருவிளக்கு மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லை என்றும், இது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறை எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்ற ஆட்சியர் கற்பகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News