காங்கிரஸ் எம்.பியின் நல்லவர் செய்த நானூறு நல்லவைகள் நூல் வெளியீடு

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது எம்பி பதவி காலத்தில் தொகுதிக்கு செய்த பணிகள் குறித்த நல்லவர் செய்த நானூறு நல்லவைகள் புத்தகம் வெளியிடப்பட்டது.

Update: 2024-04-01 04:51 GMT

 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை பல வியூகங்களில் செய்து வரும் நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மாணிக்கம் தாகூர் கடந்த ஐந்து ஆண்டுகளில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 400 திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் வைத்து விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் வெளியிட்டனர்.

  கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா சொக்கர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி ஆகியோர் நல்லவர் செய்த 400 நல்லவைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டனர் இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சென்றடையும் வேண்டும் எனவும் இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக மாணிக்கத் தாகூர் செயல்பாடுகள் மக்களிடம் சென்றடையும் எனவும் இந்த சாதனை புத்தகத்தை வைத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து மாணிக்கம் தாகூரை மிகப் பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News