ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Update: 2024-02-28 19:21 GMT
 வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கநகர் கிளை இ.கம்யூ கிளை செயலாளர் செந்துார் பாண்டி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்தார்.

அதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கநகர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 61 ஏழை, எளியோர்கள் வசித்து வருவதாகவும். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை கொண்ட இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News