வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-15 01:42 GMT
வளார்ச்சிதிட்ட பணீகள் ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, ரோசல்பட்டி முத்தால் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அரசு பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 8.65 இலட்சம் மதிப்பில் பள்ளி கட்டடம் புணரமைக்கப்பட்டு வரும் பணிகளையும், அதனை தொடர்ந்து, ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.

Tags:    

Similar News