சீர்காழி பகுதியில் மாம்பழத்திற்கு வாக்கு வேட்டை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி சீர்காழி பகுதியில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு வேட்டை.

Update: 2024-04-12 04:36 GMT

வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சீர்காழி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு, மீனவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களிலும், நகரங்களிலும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும். மயிலாடுதுறை தொகுதியை சின்ன சிங்கப்பூராக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என வாக்குறுதிகள் அளித்து தீவிர பரப்புரை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சீர்காழி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இரண்டு சக்கர வாகன அணிவகுப்புடன், பட்டாசு வெடித்து பேண்டு இசை முழங்க, திறந்த வெளி வாகனத்தில் சீர்காழி பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி, மணிகூண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக தொண்டர்களுடன் சென்று வாக்குசேகரித்தார்.
Tags:    

Similar News