தேடப்பட்டு வந்த ஆயுள் தண்டனை கைதி ஈரோட்டில் கைது

2012ஆம் ஆண்டு வயதானவரை கொலை செய்து பணம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, பரோலில் சென்று தலைமறைவானவர் தற்பொழுது பிடிபட்டுள்ளார்.

Update: 2024-06-20 05:15 GMT

பைல் படம் 

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அடையாறு காவல் மாவட்ட J 3 கிண்டி காவல் நிலைய எல்லையில், 72 வயதான ஏழுமலை என்பவரை கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கிலும் மற்றும் கேரளா மாநிலத்தில் சுய ஆதாயத்திற்காக கொலை செய்த வழக்கிலும் ஒட்டபாலம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவாளி சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பரோலில் வந்த சிவகுமார் தலைமறைவானார். தற்பொழுது ஈரோட்டில் தனது அடையாளத்தை மறைத்து வேறு ஒரு அடையாளத்துடன் பணியாற்றி வந்த அவரை  சென்னை பெருநகர காவல் தீவிர குற்றப்பிரிவால் கைது செய்தனர்.
Tags:    

Similar News