ஒகேனக்கல்லில் 2500 அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 17 நாட்களுக்குப் பிறகு நீர் வரத்து அதிகரிப்பு

Update: 2024-03-14 07:43 GMT

ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 17 நாட்களாக நீர் வரத்து சரிந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஆறுகளில் பல்வேறு இடங்களில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு பாறைகளாக காட்சி அளித்து வந்தது இந்த நிலையில் நேற்று மாலை முதல் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றல் வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு சுமார் 2500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டு உள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து நீர்வரத்தின் அளவை கணக்கிட்டு வருவதாகவும் கூறினர்.
Tags:    

Similar News