தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் துணை மேயர் சுனில் குமார் கலந்து கொண்டார்.

Update: 2024-05-10 08:33 GMT

தண்ணீர் பந்தல் திறப்புவிழா 

வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் சித்தூர் பஸ் நிலையம், தாராபடவேடு மண்டல அலுவலகம், காட்பாடி ரயில் நிலைய பஸ் நிறுத்தம், ஓடைப் பிள்ளையார் கோவில், சில்க்மில் ஆகிய பஸ் நிறுத்தம் பகுதியியில் துணை மேயர் எம்.சுனில்குமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, ஜூஸ், பழம், நீர் வழங்கினார்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ரஜினி, மாவட்ட பிரதிநிதி கே.ஏ.கண்ணன், பகுதி துணை செயலாளர்கள் கே.எஸ்.கண்ணன், சரஸ்வதி முரளி, வட்ட செயலாளர்கள் சசிக்குமார், சம்பந்தம், இளங்கோ, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டீக்காராமன் உடனிருந்தனர்.

Tags:    

Similar News