பொங்கல் தொகுப்பு எங்களுக்கு வேண்டாம்; விவசாயிகள் அதிரடி

மோகனூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்து, விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

Update: 2024-01-10 10:38 GMT

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தமிழக அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்து, தங்கள் வீடுகளுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 48 போராட்டங்களை நடத்தியுள்ளனர்.ஆனால் தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தவித பதில் அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், அப்பகுதியில் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு முன்பு, பொங்கல் பரிசை புறக்கணிக்கிறோம் என்ற நோட்டீசையும் ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News