நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

வாக்குப்பதிவு எந்திரந்தில் கோளாறு செய்வார்கள் என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 09:16 GMT

அமைச்சர் சாமிநாதன்

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.இதில் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய போது , வரும் தேர்தல் பிரதமரை நிர்ணிக்கும் தேர்தல் என்றும் , பாண்டிச்சேரியை சேர்த்தும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் , எனினும் வாக்குப்பதிவு எந்திரந்தில் கோளாறு செய்வார்கள் என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்

Tags:    

Similar News