நெல்லைக்கு வந்த அமைச்சருக்கு வரவேற்பு

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் சாமிநாதனுக்கு திமு.,வினர் வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-12-30 03:35 GMT

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் சாமிநாதனுக்கு திமு.,வினர் வரவேற்பு அளித்தனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவியாக தமிழக அரசு சார்பில் 6000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த நிதி உதவி வழங்கும் பணிகளை இன்று 30/12/23 பார்வையிடுவதற்கு நெல்லைக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வருகை தந்தார். அவரை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர்.
Tags:    

Similar News