பசுபதி கோவிலில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

பசுபதி கோவில் செயின் மேரிஸ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் சார்பில் எழுதுகோல்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-02 10:08 GMT

எழுதுகோல் வழங்கிய போது

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பசுபதிகோவில் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாபநாசம் தாலுக்கா பசுபதி கோவில் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராம் பிரபு தலைமை தாங்கினார்.

பள்ளி தாளாளர் கோஸ்மான் ஆரோக்கியராஜ், நிர்வாக இயக்குனர் அந்தோணி சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் செழியன் அனைவரையும் வரவேற்றார்.பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர், தொழில் அதிபர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரம் பேருக்கு இனிப்புகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினர்.

இதில் நிர்வாகிகள் அருணகிரி, நித்தியானந்தம், வினோத், பழனி, சுதாகர், யுவராஜா, மகா அழகேஷ், பிரவீன், சூரிய கரன், கலியமூர்த்தி, மணிகண்டன், சவுந்தரராஜன், பிரான்ஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில் நுட்ப அணி அருண் நன்றி கூறினார்.

Tags:    

Similar News