தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் !
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவிகாபுரம் அரசு பள்ளிக்கு மின் விசிறிகளை வழங்கி நலத்திட்ட உதவிகள்.
Update: 2024-03-01 06:52 GMT
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு பெரிய நாயகி அம்மன் கோயில் விழா குழுத் தலைவர் மீனாட்சி சுந்தரம் அங்காளம்மன் கணினி நிறுவனர் செந்தில்குமார் ஆகியோர் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பீட்டில் மின் விசிறிகளை வழங்கி தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார் உடன் தலைமையாசிரியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.