மக்கள் எதிர்பார்ப்பது மோடியை தான்: சௌமியா அன்புமணி

தேசிய கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-31 14:04 GMT

செய்தியாளரை சந்தித்த பாமக வேட்பாளர் 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.பி்ன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தருமபுரியில் நான்கு நாட்களாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்,

எங்கு பார்த்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, குறிப்பாக பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது, தருமபுரி மாவட்ட மக்கள் புன்னகையோடு தான் வரவேற்கிறார்கள், பிரதமர் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகள் நல்ல மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது,

இந்த மாவட்டத்தை பொறுத்த வரை தண்ணீர் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது, இந்த மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையி்ல் நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது, மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக கௌரவத் தலைவர் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கர்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன், உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News