கந்திலிஅருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் பணம் எரிந்து நாசம்

கந்திலிஅருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் மதிப்பிலான தானியம் ரொக்கம் பணம் எரிந்து நாசம் அடைந்து.

Update: 2024-01-27 09:13 GMT

தீவிபத்தில் எறிந்த வீடு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலிஅருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் மதிப்பிலான தானியம் ரொக்கம் பணம் எரிந்து நாசம்!கந்திலி போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த தோட்டண்ணன் மகன் விவசாயி விநாயகம் (70) இவர் மனைவி சுசீலா இருவரும் நேற்று வெளியூர் சென்றுள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமாக ஓலை வீடு உள்ளது இந்நிலையில் இரவு மின்கசிவு காரணமாக ஓலை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோதும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்து ரூ.1.5 லட்சம் ரொக்கம் பணம், மற்றும் நிலப்பட்டா, நெல் மூட்டைகள் 10, கேழ்வரகு 5 மூட்டை, வேர்கடலை 5 மூட்டை என சுமார் 2 லட்சம் மதிப்பிலான தானியங்கள் மற்றும் ரொக்கம் பணம் எரிந்து சாம்பலானது.

இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லக்கி நாயக்கன்பட்டி பகுதியில் மின் கசிவு காரணமாக வீடு மற்றும் உறக்கப்பணம் தானியங்கள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News