விருதுநகர் அருகே மனைவி மற்றும் மகள் மாயம்

விருதுநகரில் மனைவி மற்றும் மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Update: 2024-05-13 16:07 GMT
மனைவி மற்றும் மகளைக் காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் பெரிய பேராளி பகுதியைச் சார்ந்தவர் சங்கர் வயது 31 டிசைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருவதாகவும் இவருக்கு நவீனா என்ற மனைவியும் இனியா ஸ்ரீ என்ற மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

நவீனா பெரிய பேராளி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு திருத்தத்தின் கீழ் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த 11ஆம் தேதி காலை விருதுநகர் யூனியன் அலுவலகத்திற்கு மீட்டிங் செல்வதாக மாலை வரை வீடு வரவில்லை இதை அடுத்து மாலை 4 மணி அளவில் நவீனா தனது தாய் ராதாவிற்கு போன் செய்து தன்னை தேட வேண்டாம் ஆசிரமத்தில் மகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறிவிட்டு,

போனை ஆப் செய்ததாகவும் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரக்கூடிய சங்கர் என்பவர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Tags:    

Similar News