மனைவி மாயம் - கணவர் போலீசில் புகார்

விருதுநகரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-02-08 04:08 GMT
காவல் நிலையம் 
விருதுநகர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் மோனிஷா தொலைபேசியில் அடிக்கடி யாரிடமும் பேசி வந்ததாக கூறப்படுகிறது இதை கணவர் கண்டித்ததாகவும் விக்னேஷ் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மனைவியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர். பல்வேறு பகுதிகளில் மனைவியை தேடியும் தனது மனைவி கிடைக்காத காரணத்தால் மனைவியை கண்டுபிடித்து தரக் கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News