மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

காமராஜர் நகர் பகுதியில் ரூ.1 லட்சம் ,18 சவரன் நகை மற்றும் மகனுடன் மனைவியை காணவில்லை என கணவர் புகார். போலீசார் விசாரத்து வருகின்றன.

Update: 2024-01-26 10:18 GMT

 மனைவி மகன் மாயம் கணவர் புகார்

கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; நேற்று முன்தினம் வீட்டிலிருந்த இவர் தனது 5 வயது மகன், ரூ 1 லட்சம் பணம் மற்றும் 18 சவரன் தங்க நகையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News