மேட்டூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

மேட்டூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அருகில் விளைநிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்தன.

Update: 2023-12-02 15:20 GMT

மேட்டூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அருகில் விளைநிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்தன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி ,சித்தி கள்ளனூர் கிராம பகுதிக்கு வந்த 2 காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலத்தில் விளைவிக்கப்பட்ட கம்பு, சோளம், ராகி போன்ற பயிர்களை நாசம் செய்தது. புகைப்படம் எடுக்க சென்ற தீபக் ( 19) என்ற இளைஞரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த தீபக் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானையை அடர்ந்த வனப்பகுதிகள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.



Tags:    

Similar News