குட்டிகளுடன் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்!

மழையில் நனைந்தபடி ட்டிகளுடன் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-05-21 12:30 GMT

மழையில் நனைந்தபடி ட்டிகளுடன் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கோவை:தமிழகத்தில் தற்பொழுது கோடை மழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோறும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவையை ஒட்டியுள்ள மலை கிராமம் ஒன்றில் காட்டு யானைகள் சாரல் மழையில் நனைந்தபடியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் 24.வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலை கிராமத்தில் எல்லையில் விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீரானது நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.அங்கு வரும் பறவைகளும் விலங்குகளும் தண்ணீர் அருந்தி செல்லும்.சில சமயங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கொண்ட பல்வேறு வனவிலங்குகளின் இந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி செல்லும்.இந்நிலையில் இன்று அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு குட்டிகளுடன் வந்த 6 காட்டுயானைகள் சாரல் மழையில் நனைந்தவாறு அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றுள்ளன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News