விவசாய தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

பணகுடி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களையும், மரவள்ளி கிழங்கு செடிகளையும் சேதப்படுத்தின.

Update: 2024-01-09 10:49 GMT

சாய்ந்த தென்னை மரம் 

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் சூறாவளி ஓடை அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு 500-க்கும் அதிகமான தென்னை மரங்களும், மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காட்டிலிருந்து இறங்கிய காட்டு யானைகள் முருகனின் தோட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், மரவள்ளி கிழங்குகளையும் சேதப்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News