மக்களவை தேர்தலுக்கு விருப்பமனு வாங்கிய மாஜி திமுக மா.செ

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை விருப்ப மனு வாங்கினார்.;

Update: 2024-02-21 04:50 GMT
 விருப்ப மனு 
தென்காசி மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக நேற்று முதல் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News