சட்டவிரோத மது விற்பனை – பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம்,தக்களையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுப்பட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-29 08:12 GMT
மது விற்பனை

குமரி மாவட்டம், தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேச்சி முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, பாக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த செல்வி (54) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானத்தை வாங்கி பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 குவாட்டர் பாட்டில் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து செல்வியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபானம் விற்ற பணம் ரூபாய் 12 ஆயிரத்து 40 ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News