சங்கரன்கோவில் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-02-02 14:01 GMT
பைல் படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தைச் சார்ந்த மருதுபாண்டி மனைவி சின்ன மாரியம்மாள் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற சங்கரன்கோவில் போலீசார் சின்ன மாரியம்மாள் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News