பெண் தீக்குளித்து தற்கொலை!

ஆரணியில் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-30 11:17 GMT

தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழங்காமூர் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் மனைவி எல்லம்மாள் (வயது 57) உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த எல்லம்மாள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் எல்லம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News