பெண் தூக்கு மாட்டி தற்கொலை

அன்னவாசல் அருகே எழுவிச்சம்பட்டியை சேர்ந்த புவனேஷ்வரி குடும்பத்தகராறு காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-05-28 06:46 GMT

பைல் படம் 

இலுப்பூர்:அன்னவாசல் அருகே உள்ள எழுவிச்சம்பட்டியை சேர்ந்தவர் சோலைமுத்து(45). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி (39).இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும், 15வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து சோலைமுத்து செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் புவனேஷ்வரி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News