பைக் மோதி பெண் பலி

செய்யாறு அருகே நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-01-14 05:05 GMT

பைல் படம் 

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி இவரது மனைவி உமா ரஞ்சனி 55, இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையை கடக்கும் போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற பைக் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அவரது மகன் கார்த்திகேயன் தூசி போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News