செங்கோட்டை அருகே பெண் கொலை: போலீசார் விசாரணை

செங்கோட்டை அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-16 12:59 GMT

கோப்பு படம் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜூவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 48). இவர்களது மகள் பவித்ரா (24). இவருக்கும் மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இ

ந்நிலையில் பவித்ரா குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது குத்துக்கல்வலசையைச் சார்ந்த அருணாசலம் என்பவரது மகன் சுரேஷ் (வயது 25) என்பவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சுரேஷ் பவித்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்குப் பவித்ரா தனது வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். அதன்படி சுரேஷ் பவித்ராவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு பவித்ராவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நேற்று மாலையில் பவித்ராவின் வீட்டிற்கு சென்று கோமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற பவித்ராவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா வழக்கு பதிவு செய்து சுரேஷ் ( 25) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 19 வயதுடைய சிறுவன் ஒருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News