சாணாரப்பட்டியில் பட்டப்பகலில் கல்லை போட்டு பெண்ணை கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்தத பெண்ணின் தலையின் கல்லை போட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-27 14:42 GMT

கொலை செய்யப்பட்ட பெண்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள சாணாரபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (60), இவரது மனைவி இந்திராணி (55). இவர்களுக்கு வளர்மதி என்ற மகளும், கார்த்திக் என்ற  மகனும் உள்ளனர். இந்த நிலையில் வளர்மதி தனது கணவருடன் கோவையில் வசித்து வருகிறார்.

கார்த்திக் பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை  ஈஸ்வரன் ஒப்பந்த பணி காரணமாக தோரமங்கலம் சென்றுள்ளார்.

இந்த நிலையில். இந்திராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வீட்டிற்கு வெளியே உரல் கல்மேல் அமர்ந்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் இந்திராணியின் தலை மீது ஹாலோ பிரிக்ஸ் கல்லைப் போட்டதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் சவரன் தங்க தாலிக்கொடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  ஆனால் காதில் உள்ள தோடு, கால் கொலுசு, ஆகியவை அப்படியே இருந்தன. வீடு திறந்து இருந்தும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படவில்லை. 

மாலையில் பால் வாங்குவதற்காக புஷ்பா என்ற பெண்வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த இந்திராணியை பார்த்ததும் பதறிப் போய் அருகே இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.  உடனடியாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திராணி குறித்த தகவலை நங்கவள்ளி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். 

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் மற்றும் ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராணி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மோப்பநாய் மேகா , கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். துப்பறியும் நாய் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி மீண்டும் வீட்டிற்கு வந்தது.  சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் வீட்டின் முன்பு கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது

பண்ணை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பட்ட பகலில் கல்லால் தாக்கி கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நங்கவள்ளி சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News