சேலம் மாநகராட்சியில் மகளிர்தின விழா:15 பெண் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

சேலம் மாநகராட்சியில் மகளிர்தின விழாவில் 15 பெண் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை மேயர், ஆணையாளர் வழங்கினர்

Update: 2024-03-09 10:17 GMT

பதவி உயர்வு வழங்கப்பட்ட பெண்கள்

 சேலம் மாநகராட்சி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தொங்கும் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. மேலும் மகளிர் தினவிழாவையொட்டி மாநகராட்சி அலுவலகம் மற்றும் 4 மண்டலங்களில் பணியாற்றும் 15 பெண் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழங்கினர். விழாவில் துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதாதேவி,

மண்டலகுழுத்தலைவர் உமாராணி, கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், உதவி ஆணையாளர்கள் வேடியப்பன், சிந்துஜா, செயற்பொறியாளர்கள் பழனிசாமி, திலகா மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News