பெண்களின் வாக்குகள் பாஜகவிற்க்கு அதிகஅளவு உள்ளது - வானதி சீனிவாசன்

திருப்பூர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மகளிர் மாநாடு வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-10 11:43 GMT

வானதி சீனிவாசன்

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மகளிர் மாநாடு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், விவசாயி எம்.எஸ்.சாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா மத்திய அரசு வழங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இதுவே காங்கிரஸ் ஆட்சி காலமாக இருந்தால் அவர்கள் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு இருக்கும் என்றார்.2024 மீண்டும் மோடி பிரதமர் ஆவார் பெண்களின் வாக்குகள் தற்போது பாஜகவிற்க்கு அதிகஅளவு உள்ளதாகவும் , தமிழ்நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறி மாநில அரசு நாடகம் ஆடுகிறது என்றார்.
Tags:    

Similar News