தென்மண்டல அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் துவக்கம்.

கோவையில் நடக்கும் தென்மண்டல அளவிலான பெண்கள் வுஷூ போட்டியில் 9 மாநிலங்களை சேர்ந்த 600 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.;

Update: 2024-01-18 08:40 GMT

வுஷூ போட்டி

கோவை: தென்மண்டல அளவிலான பெண்கள் வுஷூ போட்டிகள் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில் மத்திய அரசின் விளையாட்டு துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் பெண் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவதாகவும் இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்ரகாண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அஸ்ஸாம் மாநிலத்திலும்,மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுவதாக கூறியவர் 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக தெரிவித்தார்.இந்த போட்டியை "ஆஸ்மிதா" அமைப்புடன் தமிழ்நாடு வுஷு ஆசொசியேஷன் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துவதாகவும் இதில் மொத்தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600 வீராங்கனைகள் சப் ஜூனியர்-ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் வீரர்கள் பங்கேற்பதாக கூறினார்.மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள் எனவும் வெற்றி பெற்றவர்களுக்க சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பண முடிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News