பரங்கிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-05 16:24 GMT

தொழிலாளி தற்கொலை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே அகரம் வானவர் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கொளஞ்சியப்பன் கூலித் தொழிலாளி. இவர் தனது தாய் குப்பம்மாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த கொளஞ்சியப்பன் வீட்டு கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கொளஞ்சியப்பனின் மனைவி சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News