சேலத்தில் கார் மோதி தொழிலாளி படுகாயம் !
சேலத்தில் தாறுமாறாக வந்த கார் தொழிலாளி மீது மோதிய விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 04:46 GMT
சிகிச்சை
மதுரையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 65). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் கண்காட்சி வடிவமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு மைதானத்தில் படுத்து தூங்கினார். அப்போது தாறுமாறாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.