பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி !

தியாகதுருகம் புறவழிசாலை சந்திப்பில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.

Update: 2024-04-04 04:53 GMT

பலி

தியாகதுருகம் புறவழிசாலை சந்திப்பில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். தியாகதுருகம் அடுத்த விளக்கூர் ஊராட்சிக்குட்பட்ட வி. புதுார் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியன், 46;கூலி தொழிலாளி.

இவர் நேற்று காலை 11:30 மணிக்கு தனது பைக்கில் தியாகதுருகத்தைச் சேர்ந்த மூர்த்தி,65; உடன் அம்சா குளம் நோக்கி சென்றார். வசந்தம் ஹோட்டல் அருகே புறவழி சாலை சந்திப்பில் சாலையை கடந்த போது உளுந்துார்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது.

இதில் பாண்டியன் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த தியாதுருகம் போலீசார் காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News