அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி

Update: 2023-12-03 06:19 GMT

விழிப்புணா்வு பேரணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு,விழிப்புணா்வுப் பேரணி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரேமலதா தலைமை வகித்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் பங்கேற்றுப் பேசியதாவது: எய்ட்ஸ் நோய் உருவாகாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைவரும் இணைந்து உதவ வேண்டும். தென்காசி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்கு பிரசவம், அதற்கான அறுவை சிகிச்சைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எய்ட்ஸ் நோயாளிகளை விலக்கி வைக்காமல் அரவணைத்து, அவா்களது முன்னேற்றத்துக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மருத்துவமனை உறைவிட மருத்துவா் செல்வபாலா, ஏ.ஆா்.டி. வட்டார மருத்துவ அதிகாரி விஜயகுமாா், அனைத்து துறை மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.



Tags:    

Similar News