நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி சார்பில் இந்திரா நகர் பூங்காவில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2024-06-05 13:23 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி மற்றும் பசுமை தமிழகம் மற்றும் ஈஷா இணைந்து இன்று மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாமக்கல்- திருச்சி சாலை இந்திரா நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி மற்றும் உலக சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சண்முகம் , நகர் நல அலுவலர் கஸ்தூரி பாய்,துப்புரவு அலுவலர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News