சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினக் கொண்டாட்டம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் செய்தனர்

Update: 2024-06-21 09:33 GMT

உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் செய்தனர்


உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் செய்தனர். யோகா என்பது மனிதனின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.யோகா என்பது ஒரு மனிதன் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ பல வழிமுறைகளை குறிக்கிறது.அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகா கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உலகம் முழுவதும் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற யோகாசன நிகழ்வில் 300 க்கும் மேற்பட்டோர் பலவித யோசனங்களை செய்து காட்டினர். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் மாணவர்கள் உட்பட பல கலந்து கொண்டனர்
Tags:    

Similar News