ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யோகா பயிற்சி

நாகை மாவட்டம், திருமருகலில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-06-21 17:10 GMT

யோகாசனம் 

 நாகை மாவட்டம் திருமருகல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.திட்ட இயக்குனர் முருகேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இப்பயிற்சிக்கு திருமருகல் வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி தலைமை தாங்கினார்.

இதில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா மற்றும் இயற்கை மருத்துவர் கற்பகம் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா பயிற்சிகளை வழங்கினார்.இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இந்துஜா,கார்த்திகா,சுபஸ்ரீ,லதா ,அண்ணாதுரை,கார்த்திகா ஐயப்பன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்கள்,கூடுகை மற்றும் கூட்டமைப்பு பணியாளர்கள்,வாழ்வாதார பணியாளர்கள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News