இந்திய ராணுவத்தில் அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தால் அக்னிவீா் வாயு (இசை கலைஞா்) தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-30 08:43 GMT

மாவட்ட ஆட்சியர்

இந்திய ராணுவத்தால் அக்னிவீா் வாயு (இசை கலைஞா்) தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய ராணுவத்தால் அக்னிவீா் வாயு (இசை கலைஞா்) தோ்வுக்காக பெங்களூரில் அமைந்துள்ள 7-ஆவது ஏா்மன் தோ்வு மையத்தின் மூலமாக 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆள்சோ்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு வரும் 05.06.2024 வரை அக்னிபத்வாயு.சிடாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பத்தாரா்கள் (இசை கலைஞா்) தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

Tags:    

Similar News