வேலூரில் இளம்பெண் தற்கொலை
வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
Update: 2024-04-22 14:50 GMT
தற்கொலை
வேலூர் சைதாப்பேட்டை தேவராஜ் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கலைமதி என்ற பானு (18). இவர் 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.