இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-03 01:04 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சோ்ந்த அன்புராஜ் மனைவி சுமதி(25). இவா் அங்குள்ள ஒரு நகை அடகு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சுமதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.