மயங்கி விழுந்து இளம் பெண் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம்,கொம்பாடியூர் பகுதியில் மயங்கி விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடைப்பெற்று வருகிறது.;
Update: 2024-04-05 05:56 GMT
இளம்பெண் பலி
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலை கொம்பாடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் நிஷாலினி கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நிஷாலினிக்கு ரத்த சோகை இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மயங்கி விழுந்து விடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நிஷாலினி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை விசாரணை நடைபெற்று வருகிறது.