இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மாரண்டஅள்ளியை அடுத்த அத்திமூட்லு கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன் மனைவி அகிலா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 05:37 GMT
கோப்பு படம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அத்திமூட்லு கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன். கூலி தொழிலாளி. இவருக்கு அகிலா என்ற மனைவியும், இரண்டு மகள்கள்,ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், மன வேதனையடைந்த அடைந்த விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.