இரயிலில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது - இரயில்வே போலீஸார் அதிரடி

விருதுநகரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ கஞ்சாவை இரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

Update: 2024-05-22 09:21 GMT

பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக விருதுநகர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து விருதுநகருக்கு ரயில் வந்தபோது ரயில்வே போலீஸார் தீவிர சோதனை நடத்தினார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர்.

அப்பொழுது அவர் 2.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தன.மேலும் விசாரணையில், அவர் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த அழகர் என்ற பெரியசாமி (27) என்பதும் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து அழகர் என்று பெரிய சாமியை போலீஸார் கைது செய்து, அவர் கடத்தி வந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இது குறித்து விருதுநகர் இருப்புபாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News