ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-01-06 09:39 GMT

 இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காவல் ஆய்வாளா் கீதா, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த தணிக்கையின்போது, அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது அந்த வேனில் 40 மூட்டைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, வேன் ஓட்டுநரான திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அ. அஜய்குமாா் (21) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். கடத்தல் அரிசியுடன் வேனையும் பறிமுதல் செய்த போலீஸாா், வேன் உரிமையாளரான திண்டுக்கல் கேகே. நகா் பகுதியைச் சோந்த கி. மாரிமுத்து என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News